வியாழன், 19 ஜூலை, 2012

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 3800 மெட்ரிக் டன் அரிசி: ஜெயலலிதா உத்தரவு



E-mail Print PDF
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த அனுமதியை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா, தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டார்.
அதன்படி, பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடைவதுடன், 3800 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர் (ஜூலை 19, 2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக