சனி, 24 மார்ச், 2012

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ)


நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ)

E-mail Print PDF
நீடூர் - நெய்வாசலில் தமுமுக வின் 98 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமுமுக வினர் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நீடுரின் வரிசை எண். 98. இந்த ஆம்புலன்சை அர்ப்பணிப்பதற்காக மாபெரும் எழுச்சியுடன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமுமுக வின் மூத்த தலைவர் ஜவஹிருல்லாஹ் .M.L.A.அவர்களும் , ம ம க வின் மாநில பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும், தமுமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சகோ. கோவை ஜாகிர், மாயவரம் அமீன், கடலூர் ஜின்னா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை M.L.A., திரு. பால அருள்செல்வன், மயிலாடுதுறை ஒன்றிய சேர்மன் அதிமுக சந்தோஷ்குமார் அவர்கள் கலந்துகொண்டார். இவ்விழாவிற்காக தமுமுக வினர் நீடுரை நோக்கி திரண்டனர். இவ்விழாவில் ஆயிரத்திருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக