புதன், 22 பிப்ரவரி, 2012

அல்-கோபர் தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்


அல்-கோபர் தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

E-mail Print PDF
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் மக்கள் பணியான கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் அவசர கால உதவிகளில் அதிக கவனம் செலுத்தி வருவது தாங்கள் அறிந்ததே குறிப்பாக உயிர் காக்கும் உதவிகளான இரத்ததானம், மற்றும் ஆம்புலன்ஸ் சர்வீசில் தமுமுகவிற்கு நிகர் தமுமுக தான் என்றால் அது மிகையாகாது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2010 ஹஜ் மாதத்தில் ஹாஜிகளுக்கு அவரசகால உதவிக்காக சவூதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் அல்-கோபர் தமுமுக முதன் முறையாக கிங் ஃபகத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது. அல்-கோபர் தமுமுகவின் சிறப்பான முன்னேற்பாடுகளுடன் கூடிய இரத்ததானத்தை பாராட்டும் வண்ணம் அல்-கோபர் தமுமுகவிற்கு கிங் ஃபகத் மருத்துவமனை நினைவுக் கேடயத்தை வழங்கியது அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக கிங் ஃபகத் மருத்துவமனையின் வேண்டுகோளுக்கிணங்க 10-02-2012 அன்று அல்-கோபர் தமுமுக தன் மாபெரும் இரண்டாவது முறையாகஇரத்ததான முகாமை நடத்தியது.
இம்முகாம் மதியம் 1முதல் 5மணிவரை நடைபெற்றது. இம்முகாமில் தம்மாம், ஜூபையில், ரஹிமா, அப்கேக், அல்ஹஸா, சிகாத் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் பெயர்களை பதிவு செய்தபோதிலும் நேரமின்மையின் காரணமாக சுமார் 100 நபர்கள் மட்டமே தங்கள் குருதியைக் கொடையளித்தனர். ஆர்வமாக இரத்தம் கொடுக்கவந்து கொடுக்கமுடியாமல் சென்ற மக்களுக்காக இன்ஷாஅல்லா மூன்றாம் கட்ட இரத்ததான முகாம் வரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தாயகத்தில் தமுமுகவின் தன்னலமற்ற இரத்ததான சேவைகளைக் கண்ட மாற்று மத சகோதரர்கள் தாங்களாகவே முன்வந்து இரத்ததானம் செய்து அனைவரையும் அகமகிழச்செய்தனர்.
இம்முகாம் அல்-கோபர் தமுமுக கிளைத் தலைவர் சகோ.இஸ்மாயில் தலைமையிலும் துணைத் தலைவர் சகோ. ஷஃபி என்ற பாபு, செயலாளர் சகோ. ஹாஜா பஷிர், பொருளாளர். சகோ. ஷஃபியுல்லா, மக்கள் தொடர்பாளர் ஃபைசர், இணைச்செயலாளர் சகோ.இலியாஸ், துணைச்செயலாளர் சகோ.ஹாஜா ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் மண்டலத் துணைத்தலைவர் சகோ. அப்துல்காதர், மண்டலச் செயலாளர் சகோ. இஸ்மாயில், மண்டலப் பொருளாளர் சகோ.நஸ்ருதீன், துணைச் செயலாளர்கள் சகோ. அப்துல்காதர் ஜக்கரியா, சகோ.அஸ்ரப், சகோ.சீனிதுஹம்மது, இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



குறிப்பு: அல்கோபர் தமுமுக சமீபத்தில் மாபெரும் மருத்துவமுகாம் நடத்தியது குறிப்பிடத்தக்கது
Last Updated ( Wednesday, 22 February 2012 23:20 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக