புதன், 22 பிப்ரவரி, 2012

கூரியூரில் தமுமுக புதிய கிளை



E-mail Print PDF
இராமநாதபுரம் மாவட்டம் கூரியூரில் தமுமுகவின் புதிய கிளை 19.02.2012 அன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது தமுமுக மூத்த தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்கள் கிளைக் கொடியினை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த 200க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது தொடர்ந்து சட்டசபையில் சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டைப் பற்றி தனது கட்சி பேசிவருவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது மமக மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.சலிமுல்லாகான் மற்றும் கூரியூர் கிளைத் தலைவர் அஹமது இபுராஹிம், மாவட்டத் தலைவர் சாதிக் பாட்சா, மமக மாவட்டச் செயலாளர் அன்வர் அலி, தமுமுக மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated ( Wednesday, 22 February 2012 23:05 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக